100. இரட்சிக்கப்பட நான் என்ன செய்ய வேண்டும் ?

நீங்கள் பாவி என்றும், உங்கள் சுயசக்தியால் பரமபதவி அடையமுடியாது என்றும் முதலாவது உணரவேண்டும் (உரோ. 3:23). மனிதன் செய்த பாவத்திற்கு தண்டனையாக இயேசு 2000 ஆண்டுகளுக்கு முன் சிலுவையிலே அறையப்பட்டு, தன் உயிரை நமக்கென்று கொடுத்து, அடக்கம் பண்ணப்பட்டு உயிரோடு எழுந்தாரென்று நம்பவேண்டும் (1திமொ. 1:15). நீங்கள் இதுவரைச் செய்த எல்லா குற்றங்களையும் வாயினால் அறிக்கையிட்டு இனிச் செய்யாமலிருக்க தீர்மானிக்க வேண்டும் (1யோவா.1:7-9). இவற்றை நீங்கள் மனதார செய்தபின், இயேசு உங்கள் பாவத்தை மன்னித்து இரட்சித்தாரென்று நம்பவேண்டும். இவற்றை நீங்கள் செய்யமுடியுமானால், அன்புள்ள இயேசுவின் பாசமுள்ள முகத்தை கற்பனை செய்து இந்த பிரார்த்தனையை செய்யுங்கள்.
     அன்புள்ள சர்வேஸ்வரா, உம் திருமகன் இயேசுவின் பெயரால் உம்மிடம் வருகிறேன். நான் சொல்லாலும், செயலாலும், சிந்தையாலும் செய்த எல்லா பாவங்களையும் உம் மகன் இயேசுவின் இரத்தத்தால் மன்னிக்க வேண்டுகிறேன். நீர் எனக்காக உம் மகனை இந்த உலகிற்கு அனுப்பினீர் என்றும், என்னை மீட்பதற்காக அவரை மரணத்திற்கு ஓப்படைத்தீர் என்றும், அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பினீர் என்றும் முழுமனதோடு நம்புகிறேன். இனிமேல் நான் பாவம் செய்யாதிருக்க என்னை உம்மிடம் முழுவதும் ஒப்புடைக்கிறேன் என்று இயேசுவின் மூலம் உம்மை மன்றாடுகிறேன்.

குறிப்பு: மேற்கண்ட 100 கேள்விகளில் ஏதாவது சந்தேகங்களோ வேறு கேள்விகளோ இருந்தால் எங்களுக்கு எழுதுங்கள். எங்களுக்கு அது பேருதவியாயிருக்கும்.