Articles

நீ கீழ்ஜாதி அல்ல 

(தன்னை கீழ்ஜாதி என்று நினைத்து தாழ்வு மனப்பான்மையில் வாழும் ஒரு நண்பருக்கு சகோ அகத்தியன் எழுதிய கடிதம்)

அன்புள்ள நண்பனுக்கு

நலம்; நலமுடன் வாழ்க. நண்பா, உன் ஜாதி பெயரை சொல்லி யாரோ உன்னை திட்டிவிட்டார்கள் என்று காயப்பட்டு நீ எழுதிய கடிதம் கிடைத்தது. மிகவும் மனவருத்தப்பட்டேன். [read more=”Click here to Read More” less=”Read Less”] 

நீ கீழ்ஜாதியும் அல்ல மேல்ஜாதியும் அல்ல. கடவுளின் வடிவில் படைக்கப்பட்டவன். ஆனால், சலுகை வாங்குவதற்காக நீயே உன்னை கீழ்ஜாதி என்று ஒத்துக் கொண்டால், பிறர் உன்னை கீழ்ஜாதி என்று புறக்கணிப்பதை தவறு என்று நீயே எப்படி குற்றம்சாட்ட முடியும்?
அறிவியல் பட்டதாரி உன் வாயாலேயே உன்னை கீழ்ஜாதி என்று கூறவைத்து, தாழ்வு மனப்பான்மையில் உன்னை தலைமுறை தலைமுறையாக ஊறவைத்து, உன் சந்ததியை கூனி குறுக வைத்து, அவமானம் என்னும் கண்ணியில் இறுக வைத்து, தந்திரமாக தங்களை மேல்ஜாதியாக்கி கொண்டார்களே, அவர்களுடைய இந்த கொடிய கொள்கை எவ்வளவு வக்கிரமானது என்பதை நீ முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு கூட்டம் அப்பாவி மனிதர்களை மிருகங்களைவிட இழிவாக நடத்திய ஜாதி பாகுபாட்டு மகாபாதகத்துக்கு பிராயசித்தமாக சலுகை என்ற பெயரில் பிச்சை போட்டதால் 2000 ஆண்டுகால காயங்களை ஆற்றிவிட முடியுமா? இட ஒதுக்கீட்டின் மூலம் பட்டமும், பதவியும், பணமும் வந்தவுடன் ஜாதி தானாக ஒழிந்ததா? ஒழிந்துவிடுமா? இந்த பொய்யான தத்துவத்தை நம்பி, உணர்ச்சிவசப்பட்டு உன்னை தாழ்த்தப்பட்ட வகுப்பில் நீயே வைத்துக்கொண்டிருக்கிறாய். ஒரு சிலர் இட ஒதுக்கீடுமூலம் பொருளாதார மேம்பாட்டை அடைந்தது உண்மையானாலும், பொருளாதார உயர்வு வந்தவுடன் ஜாதி உணர்வு, தாழ்வு மனப்பான்மை அவர்களைவிட்டு மறைந்துவிட்டதா ? தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த ஒருவர் இட ஒதுக்கீட்டின்மூலம் பணக்காரராகி விட்டதால், இவரோடு பிராமணர்கள் திருமணம் செய்வார்களா? அப்படியே திருமணம் நடந்தாலும் அவருடைய பணத்தைத்தான் திருமணம் செய்கிறார்களே தவிர மனிதனை அல்ல. இதுதானே மறுக்கமுடியாத உண்மை. இடஒதுக்கீடு என்னும் தேங்காய் துண்டுக்காக இந்த கொடிய ஜாதி துவேஷ பொறியில் நிரந்தரமாக உன்னை சிக்கவைத்தார்கள். இந்த துர்நாற்றச் சாக்கடையிலிருந்து உன்னை வெளியேறவிடாமல் தடுத்து, உனக்கே பிடிக்காத உன் ஜாதிப் பெயரை சொல்லி சலுகை வாங்க வைத்திருக்கிறார்கள். இது கடைந்தெடுத்த கேவலம் அல்லவா?
     தாழ்த்தப்பட்டவர்களை காந்தியடிகள் ஹரிஜனங்கள் என்று அழைத்ததால் நம் சமூக அந்தஸ்து உயர்ந்துவிட்டதா? பள்ளர் என்ற பெயரை எடுத்துவிட்டு தேவேந்திரகுல வேளாளர் என்று பெயர் மாற்றியதால் நமது செல்வாக்கு உயர்ந்துவிட்டதா? சக்கிலியர் என்ற பெயரை எடுத்துவிட்டு அருந்ததியர் என்ற புதுப்பெயர் சூட்டியதால் நமக்கு மரியாதை உயர்ந்துவிட்டதா? அம்பட்டர் என்ற பெயருக்கு பதில் மருத்துவர் என்று பெயர் வைத்ததால் என்ன வித்தியாசம் வந்துவிட்டது? இப்போது தேவையானது பெயர்மாற்றம் அல்ல. மனமாற்றம். சாதிப் பெயரே ஒழியவேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்கவேண்டும்.
நீ யாரைவிட கீழ்ஜாதியாகிவிட்டாய்? ஒருவன் தன்னை மேல்ஜாதி என்று கர்வம் கொள்வது மட்டுமல்ல; கீழ்ஜாதி என்று ஒத்துக்கொள்வதும் மிகப் பெருங்குற்றமாகும்.
யாரோ ஒரு மனநோயாளி தன்னை மேல்ஜாதி என்று பீத்துகிறான் என்பதற்காக நீ ஏன் உன்னை கீழ்ஜாதி என்று ஒத்துக்கொள்ளவேண்டும்? உன்னை நீயே கீழ்ஜாதி என்று ஒத்துக்கொள்வதும் படைத்த கடவுளை இழிவுபடுத்துவதாகும். உடல் உறுப்புகள் சரியாக இயங்கும் உன்னைப் பார்த்து ஒருவன் நொண்டி என்று கூறுவது உன்னை பெற்ற தந்தையை அவமதிப்பதல்லவா?
ஒற்றுமையாக ஒருதாய் பிள்ளைகளாக வாழவேண்டிய நம்மை மேல்ஜாதி என்றும் கீழ்ஜாதி என்றும் பிரித்து ஜாதி துவேஷத்தை உருவாக்கியதே ஒரு கடவுளானால் அந்த கடவுளை உன் கடவுளாக வழிபடுவதை நீ உடனே மறு பரிசீலனை செய்யவேண்டும்.
இந்த மண்ணில் இருவர் ஜாதி பாகுபாடு இல்லாமல் தங்கள் மனதுக்கு பிடித்தவரை திருமணம் செய்யும் சுதந்திர உரிமை கிடைக்க வேண்டுமானால், நிஜமான கடவுளுக்குமுன் மேல்ஜாதி என்றும் கீழ்ஜாதி என்றும் இருக்கமுடியாது என்னும் மிகப்பெரிய உண்மையை நீ நம்பியேயாக வேண்டும். இறைவன்தான் ஜாதியை பிரித்தான் என்னும் நயவஞ்சகப் பொய்யை நம்பி ஏமாந்து வாழ்ந்தது போதும். சாதியம் என்பது தெய்வீகமல்ல; சாத்தானியம்.
பள்ளி நாட்களில் உன்னிடம் இருந்த சூடு, சுரணை, மானம் எல்லாம் இன்று எங்கே போனது? தாகமாக இருக்கிறது என்பதற்காக விஷத்தை குடிக்க முடியுமா ? மலத்தை எடுத்து என் சட்டை பையில் போட்டுக்கொண்டு, எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள் என்று வேதனைப் படுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
ஒருவன் தன்னைத்தான் கீழ்ஜாதி என்று ஒத்துக்கொள்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றது. ஜாதி அடிப்படையில் சலுகை கொடுப்பது சலுகை வாங்குபவரை நாகரீகமாக இழிவுபடுத்துவது அல்லவா?
ஜாதி அடிப்படையில் யாரிடமும் எந்த உதவியையும் பெற்றுக்கொள்ளாதே. பணம், பதவிக்காக தன்மானத்தை விலைக்கு விற்பது பணத்துக்காக விபச்சாரி தன் உடலை விற்பது போன்றது அல்லவா?
அரசு பதிவேடுகளில் நமது ஜாதிப் பெயர் தேவை இல்லை என்று அரசாங்கம் 1973-லேயே ஆணை பிறப்பித்திருக்கிறது. ஆனால், அந்த முற்போக்கு சட்டத்தை, தங்களுடைய ஓட்டு வங்கியை வளர்க்க, சாதியை வைத்து பிழைக்கும் அரசியல்வாதிகள் திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள்.
என்னுடைய பார்வையில் சாதி சான்றிதழ் என்பது பகுத்தறிவு பற்றாக்குறையால் மன ஊனமுற்றோருக்கு அரசு கொடுக்கும் சிறப்பு அடையாள அட்டை என்றே கருதுகிறேன். சாதி என்னும் பேய் இன்னும் அழியாததற்கு மூல காரணம் சாதி சான்றிதழ்தான். எனவே, அதை நான் புறக்கணித்ததுபோல நீயும் புறக்கணித்துவிடு!
சலுகைகள் மனசாட்சிப்படி உடல் ஊனமுற்றோர், ஏழைகள், விதவைகள் மற்றும் அநாதைகளுக்கு கொடுக்கப்பட வேண்டுமே ஒழிய ஜாதி, மத, இன, மொழி அடிப்படையில் கொடுக்கப்படக்கூடாது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரஜைகளுக்கு ஏழ்மையின் காரணத்தால் அரசு உதவி செய்தேயாக வேண்டும். அதற்கு உன் ஜாதிப்பெயர் அரசாங்கத்துக்கு தேவை இல்லை.
ஜாதி அடிப்படையில் சலுகை வாங்குவது நீ பேருந்தில் பயணம் செய்யும்போது நிற்கமுடியாமல் முதியவர் ஒருவர் தள்ளாடிக்கொண்டே உன் அருகில் நின்றுகொண்டிருக்கையில் அவருக்கு இடம் கொடுக்காமல் நீ கீழ்ஜாதி என்று கூறிக்கொண்டு உன் இருக்கையிலேயே அமர்வது போன்றது. பசித்தவன் எந்த ஜாதியானாலும் உணவளிக்கவேண்டும். பசி, வறுமைக்கு ஜாதி இல்லை. அந்த அடிப்படையில் சலுகை கொடுத்தால் ஜாதியும் ஒழியும்; வறுமையும் ஒழியும்.
ஜாதி அடிப்படையில் சலுகைகள் கொடுக்கப்படுவதுவரை ஜாதி ஒழியாது. ஜாதி ஒழிவதுவரை ஜாதி சங்கங்களும் ஜாதிப் படுகொலைகளும் ஒழிவதில்லைநீ ஏதாவது ஜாதி சங்கத்தில் இருந்தால் தயவு செய்து வெளியே வந்துவிடு. ஜாதி சங்கத்தார் சந்தா என்று பணம் வசூலிக்க வந்தால் கொடுக்க மறுத்துவிடு. ஜாதி உணர்வைத் தூண்டும் பத்திரிக்கைகள் வாசிப்பதை இன்றோடு நிறுத்திவிடு.
ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கு எடுப்பதன்மூலம் அரசாங்கமே மக்களுக்குள் ஜாதி உணர்வை தூண்டுவதை நினைத்தால் மனவேதனையாக இருக்கிறது.
நாம் உயிரோடிருக்கும் நாட்களிலேயே இந்த ஜாதிப்பிசாசுக்கு சமாதி கட்டாவிட்டால், நாம் கல்வி கற்றதனால் எந்த பயனும் இல்லை. ஜாதியின் பெயரைச் சொல்லி பணக்காரனாகி விட்டால் இந்த ஜாதி துர்நாற்றம் உன்னைவிட்டு அகன்றுவிடும் என்று நினைக்கிறாயா? பணம் வந்தால் தாழ்வு மனப்பான்மை உணர்வு உன்னைவிட்டு போய்விடும் என்று நினைக்கிறாயா?
நீதான் அறிவு பற்றாக்குறையால் இவ்வளவு நாளும் இந்த சாதிச் சிறைச்சாலையில் வாழ்ந்துவிட்டாய்; உன் பிள்ளைகளையாவது இந்த ஜாதிப் பேயின் கோரப்பிடியிலிருந்து காப்பாற்று. அவர்களை சுதந்திர பறவைகளாக வாழவிடு! நீ மனதார விரும்பிய பெண்ணை திருமணம் செய்யவிடாமல் சாதியை சொல்லி தடுத்து உன் தனிமனித உரிமையில் மண் அள்ளி போட்ட இந்த பகுத்தறிவற்ற சமுதாயத்தை நாம் சுத்தம் செய்யவேண்டாமா?
சாதியத்தின் ஆபத்தான விளைவுகளை என் குடும்பத்தாருக்கு விளக்கிச் சொன்னேன். அப்பா முதலில் புரிந்துகொண்டார். பின்னர் அனைவரும் எனது புரட்சிகரமான கருத்துக்களை ஆமோதித்தனர். பெற்றோரின் பரிபூரண சம்மதத்தோடு ஜாதி பார்க்காமல் திருமணம் செய்தேன். அதுபோல உன் பிள்ளைகளுக்கு ஜாதி பார்க்காமல் திருமணம் செய்ய இப்போதே உன் குடும்பத்தினருக்கு சாதி மறுப்பு கொள்கையை போதனை செய். ஆரம்பத்தில் அவர்கள் உன்னை புரிந்து கொள்ளாமல் இருந்தாலும் ஒருநாள் அவர்களே உன்னை பாராட்டுவார்கள்.
அர்த்தமற்ற மூடநம்பிக்கைகளை எந்த சாந்த மூர்த்தி சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாதே !
சிங்கத்தின் ஆசனவாய்க்கு அருகில் வாலாக இருப்பதைவிட, எலிக்கு தலையாக இருப்பதே மதிப்பிற்குரியது.
கீழ்ஜாதிக்காரன் என்ற அவப்பெயரோடு உயர்ந்த அதிகாரியாக இருப்பதைவிட, சாதாரண பதவியில் இருக்கும் நிலைவந்தாலும் ஜாதியே இல்லை என்னும் முற்போக்கு கொள்கையோடு நெஞ்சம் நிமிர்த்தி நிற்பதுதான் தன்மானம். வியாதியால் செத்தவர்களைவிட ஜாதியால் செத்தவர்களே அதிகம்.
இவ்வுலகில் பிறந்த நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள்போல ஒற்றுமையாக வாழ பிறந்தவர்கள். இதற்கு தடையாக நிற்கும் வர்ணாசிரம அதர்மத்தை நாம் புறக்கணிக்கவேண்டும்.
பிரம்மாவின் தலையிலிருந்து வந்தவன் பிராமணன், அவனுடைய தோள்பட்டையிலிருந்து வந்தவன் சத்திரியன், அவனுடைய தொடையிலிருந்து வந்தவன் வைசியன், அவனுடைய பாதத்திலிருந்து வந்தவன் சூத்திரன் என்னும் சமூகவிரோத, ஆதிக்கக் கொள்கையை நீ நம்பினதால்தான் தாழ்ந்தஜாதி என்னும் பட்டத்தோடு நின்றுகொண்டிருக்கிறாய். அனைத்து மக்களையும் சமமாக பார்ப்பவன்தான் உண்மையான கடவுள் என்று உன் மனசாட்சிக்குத் தெரியும். எது சரியான ஆன்மீகம் என்று ஆராய்ந்து நிதானமாக ஒரு முடிவுக்கு வா!
நீ இன்ன ஜாதி என்று யாரிடமும் எந்த சூழ்நிலையிலும் சொல்லவேண்டிய தேவை இல்லை. உன் வீட்டுக்கு மக்கள் தொகை கணக்கு எடுக்க வரும் அதிகாரிகள் உன் ஜாதி என்ன என்று கேட்டால் மனிதஜாதி என்று தைரியமாக சொல். உன் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்போது அவர்கள் உன் ஜாதியை கேட்டால் மனிதஜாதி என்று திட்டவட்டமாக சொல்லிவிடு. ஜாதி அடிப்படையில் யாருக்கும் எந்த உதவியும் செய்யாதே.
தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தது உன் தவறு அல்ல. ஆனால் தாழ்த்தப்பட்டவனாகவே இறப்பது உன் தவறுதான்.
நம் தலைக்குமேல் காகம் பறப்பதை நம்மால் தடை செய்ய முடியாது. ஆனால், அந்த காகம் நம் தலையிலேயே கூடு கட்டுவதை நாம் தடை செய்யாமல் இருக்கமுடியாது.
தீண்டாமை ஒரு குற்றம், பாவச்செயல் என்று பள்ளி பாடபுத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அந்த பள்ளியின் பெயரிலேயே சாதிப்பெயர் இருக்கிறதே! “ஜாதிகள் இல்லையடி பாப்பா”  என்று கற்றுத்தரும் அதே பள்ளியில்தான் மாணவர்களை சேர்க்கும்போது உன் ஜாதி என்ன ? என்று கேட்கிறார்கள். 
ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி என ஆணித்தரமாக அடித்து கூறியது கோனார் தமிழுரை அல்லவா! இதிலிருந்து பாடபுத்தகத்துக்கும் நிஜவாழ்விற்கும் சம்பந்தம் இல்லை என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். எல்லா கல்வியாளர்களையும் நம்பாதே! பலர் நம்மை வைத்து பிழைக்க வந்தவர்கள்.
உன்னைப்போல் இருந்தவர் பலர் நமது இயக்கத்தின்மூலம் ஜாதி உணர்வை மறந்துவிட்டார்கள். நீயும் இலட்சியவாதியாக எழும்பு. உன் மனசாட்சிக்கு மட்டும் பயப்படு. நீ எடுக்கப் போகும் இந்த புரட்சிகரமான முடிவுக்கு எதிராக உன் பெற்றோர், உறவினர், நண்பர்கள், ஜாதியை வைத்து பிழைக்கும் அரசியல் கட்சியினர் எத்தனைபேர் எழுந்தாலும் பயப்படாதே!
நல்ல விஷயத்திற்காக தனியாக நிற்கவேண்டிய நிலை வந்தாலும் தைரியமாக நில்.
உன் கண்ணில் சுய மரியாதை அறிவொளி வீசுவதை உலகம் உணரட்டும். உலகை மாற்றும் சக்தி உனக்குள் இருக்கிறது.
இது தொடர்பாக வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் தயவு செய்து mananimmathi@gmail.com என்ற மின்முகவரியில் தொடர்பு கொள்.
வாழ்த்துக்கள்.
அன்புடன் அடம்பிடிக்கும்
உன் அன்பு நண்பன்
அகத்தியன்

[/read]

 


ஜல்லிக்கட்டு 

(அண்ணா! ஜல்லிக்கட்டைப் பற்றிய தங்களுடைய கருத்து  என்ன என்று பலர் கேட்டார்கள். அதற்கான பதிலை கீழே பதிவு செய்திருக்கிறேன்).

  • ஜல்லிக்கட்டின் மூலம் மாடுகள் வதைக்கப்படுகின்றன அல்லவா! என்று பலர் கேள்வி கேட்கின்றனர்.

விலங்குகளை வதைப்பது கொடுமை; மாட்டை துன்புறுத்துவது அநியாயம் என்று PETA அமைப்பு கூறுவதை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டால், லட்சக்கணக்கான மாடுகளைக் கொன்று அவற்றின் இறைச்சியை இந்தியர்கள் அரசு அனுமதியோடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்களே! அது இதைவிட கொடுமை அல்லவா? அரசாங்கத்துக்கு விலங்கினங்களின்மீது ஜீவ காருண்ணிய சிநேகம் இருக்குமானால், அவற்றை கொன்று காசாக்குவதை அல்லவா முதலில் தடை செய்யவேண்டும் ? Read More……….
 
 
 


 

இந்திய கிறிஸ்தவம் புறக்கணிக்கப்படுவது ஏன்?

            கத்தோலிக்கர்களை சிலை வழிபாட்டினர் என்று CSI சபையினர் புறக்கணித்துவிட்டார்கள். CSI சபையின் ஞானஸ்நானம் சரி இல்லை என்று பாப்திஸ்துகள் சொல்கிறார்கள்.  பாப்திஸ்து சபையை AG சபையினர் பாரம்பரிய சபை என்று வெறுத்துவிட்டார்கள். AG சபையை ஒரு ஆவிக்குரிய சபையாகவே TPM மக்கள் கணக்கில் எடுக்கமாட்டார்கள். TPM மக்கள் வேறு யாரிடமும் சிரிக்ககூட மாட்டார்கள். இவர்கள் ஒருவரையும் “யேகோவாவின் சாட்சிகள்” கிறிஸ்தவர்கள் என்றே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.  Read More…………[read more=”Click here to Read More” less=”Read Less”] 
இயேசு நாமக்காரர்கள்” நாங்கள்தான் உண்மையான கிறிஸ்தவர்கள்; வேறு யாரும் பரலோகம் போகமுடியாது” என்கிறார்கள். இவர்கள் அனைவரையும் பார்த்து “பாவிகள்” என்று ஏழாம்நாள்காரர்கள்” சொல்கிறார்கள். இவர்கள் ஒருவருமே சரி இல்லை என்று மார்மன்கள் அறிவித்துவிட்டார்கள். தங்களைத்தவிர வேறு எல்லாரும் நரகத்துக்குத்தான் போவார்கள் என்று புதிய எருசலேம்” சபையினர் முறைக்கிறார்கள். இவர்கள் ஒருவருடைய ” சபை பெயரும்” சரி இல்லை என்று கிறிஸ்துவின் சபையார் Tension ஆக இருக்கிறார்கள். இதில் ஒரு ஜாதிக்காரன் வேறொரு ஜாதிக்காரனை ஏற்றுக்கொள்ளமாட்டான்.
இப்படி யாரும் யாரையும் ஏற்றுக்கொள்ளாமல், மிருகங்களைப்போல கடித்து குதறுவதை பார்க்கும் மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் கடுப்பாகி கடவுளே இல்லை” என்னும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
கிறிஸ்தவர்கள் ஒன்றுசேராவிட்டால் இயேசு மட்டும்தான் கடவுள்” என்று பிறரால் ஒத்துக்கொள்ள முடியாது என்று இயேசுவே சொல்லிவிட்டார். யோவான் 17:21.
அன்பைப்பற்றி பேசும் நாம் இப்படி கேவலமாக பிரிந்துகிடக்கிறோமே; பிறர் நம்மை அசிங்கமாக பார்க்கிறார்களே என்னும் அடிப்படை சுரணைகூட ஊழியர்களுக்கு இல்லை. கடவுளின் இராஜ்ஜியத்தை கட்டுகிறோம் என்னும் தரிசனம் இருந்தால்தானே அந்த ஒற்றுமை ஏக்கம் வரும். இங்கு ஊழியர்கள் தங்கள் இராஜ்ஜியங்களை அல்லவா இயேசுவின் பெயரில் கட்டி எழுப்புகிறோம். ஞானஸ்நானத்தைப் பற்றி 4 மணி நேரம் வேதபாட வகுப்புகள் நடத்தும் போதகப்பிதாக்களுக்கு அன்பைப் பற்றி பேச 4 நிமிடம்கூட இல்லை. பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும். நமது வேத அறிவும் ஆராய்ச்சியும் நம்மை நற்குணசாலிகளாக அல்லவா மாற்றியிருக்க வேண்டும். ஆனால், இவ்வளவு ஆண்டுகளாக பிரிவினைகளையும் கசப்பு வைராக்கியங்களையும்தானே உருவாக்கி இருக்கின்றன. கிறிஸ்தவத்தின் அடிப்படை மூலக்கூறே அன்புதானே! நமக்காக தன் உயிரையே கொடுத்த அந்த பாசமுள்ள நெஞ்சம் எதற்காக ஏங்குகிறது என்பது தெரிந்தால்தானே அவருடைய நோக்கங்களுக்கென்று வாழமுடியும்!
 
[/read]

 


 

ஊழிய பங்காளரின் கடமைகள்

(அண்ணா ! உங்களுடைய ஊழியத்தை நான் நேசிக்கிறேன். இதற்கு என்னாலான உதவி எதாவது செய்யலாம் என்று நினைக்கிறேன் என்று என்னிடம் கேட்டவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது.)
 
கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் ஜாதிப் பாகுபாடுகள் அழியவேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.
சபைகளில் பேச வாய்ப்பு கிடைக்கும்போது ஜாதி எவ்வளவு நாசகரமானது என்பதை விளக்கலாம். திருச்சபையின் வளர்ச்சிக்கு ஜாதி எவ்வளவு பெரிய தடையாக இருக்கிறது என்பதை சாந்தத்தோடு விளக்கி போதிக்கவேண்டும். அவர்களுடைய சந்தேகங்களுக்கு வேதத்திலிருந்து பதில் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.   Read More…………………
 


சாதி எப்போது ஒழியும்?

ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராக கடவுளிடம் பிரார்த்தனை செய்வதால் “மட்டும்” ஜாதி ஒழிந்துவிடுமா ? Read More……………………