Home


Latest Posts….


ஒரு வேண்டுகோள் 
“கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே தகப்பனுடைய பிள்ளைகள்’ என்ற சகோதரத்துவ புரிதல் உடையவர்கள் ; அவர்கள் சாதிப் பாகுபாடுகள் இல்லாமல், அன்போடு, ஒரே தாயின் பிள்ளைகளைப்போல ஒற்றுமையாக வாழ்பவர்கள்” என்று பிறர் சொல்லுமளவுக்கு கிறிஸ்தவர்கள் நாம் வாழ்ந்துகாட்டவேண்டும்.
பாவம் என்று தெரியாமல் ஒருவர் செய்யும் செயலும் பாவம்தான். ஒரு செயல் பாவம் என்று தெரிந்தும் கடைபிடிப்பது பெரிய பாவமாகும். ஆனால், அது பாவம் என்று தெரிந்தும், அதை தடுக்க முயற்சி செய்யாமல், அதைவிட்டுக் கடந்து சென்றுவிடுவது மிகப் பெரிய பாவமாகும் .
அதேபோல, சாதியம் பாவம் என்று தெரியாமலேயே கடைபிடிப்பதைவிட, அது பாவம் என்று தெரிந்து கடைபிடிப்பது பெரிய பாவமாகும்.
அதை தடுத்து நிறுத்தும் வலிமை இருந்தும், அதைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்யாமல் கடந்து சென்றுவிடுவது மிகப்பெரிய பாவமாகும்.
“சாதி ஒரு சமூகத் தீங்கு” என்று கிறிஸ்துவின் சிந்தையுடைய கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்தால் சாதியத்தை கிறிஸ்தவத்தைவிட்டுத் துரத்திவிடலாம். அதற்காக, கடவுளின் துணையோடு, “கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்” என்று ஓர் ஊழியம் செய்கிறோம். கிறிஸ்தவ சகோதரத்துவத்தை விரும்பும் கிறிஸ்தவர் மட்டும் இதில் இணைகிறார்கள்.
சகோதரங்களே, நீங்களும் கீழ்காணும் இணைப்பைச் சொடுக்கி இந்த ஊழியத்தில் இணையலாமே!