041. இரட்சிக்கப்பட பணம் கொடுக்க வேண்டுமா ?

     இரட்சிப்பு முற்றிலும் இலவசமானது. நாமனைவரும் கிறிஸ்து நிறைவேற்றிய மீட்புச்செயலின் மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகிறோம் (உரோ. 3:24). “நலம் குன்றியவரைக் குணமாக்குங்கள் இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள் தொழுநோயாளரை நலமாக்குங்கள் பேய்களை ஓட்டுங்கள் இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய் வழங்குங்கள்” (மத். 10:8) என்று கிறிஸ்து அறிவுரை கூறினார். பணம் கொடுத்தால் பரலோகம் போய்விடலாம் என்னும் தத்துவம் உண்மைக்கடவுள் இயேசுவிடம் பலிக்காது. இயேசுவின் கொள்கையை கடைபிடிப்பதும், இரட்சிக்கப்படுவதும், உங்கள் தனிப்பட்ட விருப்பம். அதற்கு எந்த ஆன்மீகத் தலைவர்களும் பணம் வசூலிக்க முடியாது. ஆனால், இயேசுவின்மீது வைக்கும் அன்பின் பொருட்டு தங்கள் நிலபுலன்கள் எல்லாவற்றையும் கடவுளின் அருட்பணிக்கென்று கொடுப்பதை கடவுள் மேலான அனுபவமாக சுட்டிக்காட்டுகிறார் (மத். 19:21).

நான் ஜெபவீட்டிற்கு வந்தால்தான் கடவுளை தொழ முடியுமா? வீட்டில் ஆராதிக்க முடியாதா ?