071) சாதி இழிவிலிருந்து விடுதலை அடைய புத்தத்துக்கு மாறிய அம்பேத்கரும் அந்த 6 லட்சம் மக்களும் பரலோகத்துக்கு வருவது கர்த்தருடைய சித்தமல்ல.

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார் (1தீமோ 2:4) என்றும் யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார் (2பேதுரு 3:9) என்றும் வேதம் சொல்கிறதே பாஸ்டர்! அப்படியிருக்க, அம்பேத்கரும் அந்த 6 லட்சம் மக்களும் பரலோகத்துக்கு வருவது கர்த்தருடைய சித்தமல்ல என்று நீங்கள் எப்படி சொல்லமுடியும்?