075. நான் ஏற்கெனவே முயற்சித்து தோற்றுவிட்டேன்.

நான் ஏற்கெனவே முயற்சித்து தோற்றுவிட்டேன்.

நீங்கள் ஒருமுறை தேர்வு எழுதி தோற்றுவிட்டால் திரும்பவும் எழுதி வெற்றிபெற முடியாது என்று நினைக்கிறீர்களா? ஒருமுறை ஒரு தொலைபேசி எண்ணுக்கு அழைக்க முயன்று தொடர்பு கிடைக்காமல் திரும்பவும் redial செய்யவில்லையா? கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்தப் பேரின்ப வாழ்வை பெற்றுக்கொள்ள மன உறுதியோடிருங்கள் (எபி. 10:36). ஒரு முறை நீங்கள் திருச்சபைக்கு வந்து பிரார்த்தனை செய்திருக்கலாம். அன்று நீங்கள் தனியாக பிரார்த்தனை செய்தீர்கள். இன்னும் ஒருமுறை கூட உங்கள் மனதை இறைவனுக்கு விட்டுக்கொடுங்கள். உங்களுக்காக சபையார் அனைவரும் பிரார்த்தனை செய்வார்கள். ஏனென்றால் ‘பிறருக்காக கடவுளிடம் விண்ணப்பித்தால் தான் பிறரை நேசிக்கிறோம் என்று அர்த்தம்’ என்னும் உண்மை ஒவ்வொரு விசுவாசியும் தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்ய ஆயத்தமாயிருக்கிறோம்.
இந்து மதத்தை பொறுத்த வரையில் எல்லாமே ஜாதகப்படி தலைவிதிப்படிதான் நடக்கும் என்பார்கள். ஆனால், இயேசுவால் உங்கள் தலைஎழுத்தை மாற்றி எழுதமுடியும். சோர்ந்து போகாதீர்கள். எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். காணாமல் போன உங்கள் நிம்மதி தழைக்கும்படி உங்களுக்காக இலவசமாக பிரார்த்தனை செய்ய காத்திருக்கிறோம். ‘முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்’ என்று திருவள்ளுவர் நம்மை உர்ச்சாகப்படுத்துகிறார். உங்களது தற்போதைய சூழ்நிலைகள் முழுவதும் எதிர்மறையாக இருக்கலாம். ஆனால், கடவுளின் பார்வையில் எல்லாம் துணியில்பட்ட தண்ணீர் போன்றது. தண்ணீர் மீது தரையைப்போல் நடந்தவர் உங்களையும் நடக்கப் பண்ணுவார். நாம் மனம் சோர்ந்து போகாதிருக்க இயேசு ஒரு உவமையை சொன்னார். அதை லூக். 18:1-7 வரையுள்ள வசனங்களில் வாசியுங்கள். நீங்கள் கடவுளுக்கு முக்கியமானவர். பெற்ற தாயினும் மேலான அன்புக்கு சொந்தத்காரர் இயேசு நிச்சயம் உங்கள் நிலையை மாற்றுவார்.

நான் கிறிஸ்தவன் என்று அழைக்கப்பட தகுதியில்லை.