088. இயேசுவால் என் கடன்களைத் தீர்க்க முடியுமா ?

இயேசுவால் என் கடன்களைத் தீர்க்க முடியுமா ?

நிச்சயமாக தீர்ப்பார். ஏனென்றால் மனிதன் கடனில்லாமல் வாழவேண்டுமென்று கருணாமூர்த்தி ஆசைப்படுகிறார். நீ பிறருக்கு கடன் கொடுப்பாய் கடன் வாங்கமாட்டாய் (இ.ச. 28:12) என்று ஆண்டவர் ஆசீர்வதிக்கிறார். நாம் வளமோடு வாழவேண்டும் என்பதற்காகத்தான் இயேசு வறியகோலத்தில் இம்மண்ணில் வந்தார் (2கொரி. 8:9). உங்களுடைய கடன் எத்தனை கோடியாக இருந்தாலும் இயேசுவால் அந்த கடன்களை தீர்க்க முடியும்.
நம் கடன்களை கடவுள் தீர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? கடவுள் கூறுகிறார். உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன உங்கள் பாவங்களே அவர் செவிசாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன (எசா. 59:2). ஆண்டவரின் கண்கள் நேர்மையானவர்களை நோக்குகின்றன. அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோருக்கு எதிராக இருக்கின்றது (1பேது. 3:12). எனவே, நீங்கள் இதுவரை செய்த எல்லா குற்றங்களையும் மன்னிக்க கடவுளிடம் வேண்டுதல் செய்யுங்கள். இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பாவம் மன்னிக்கப்பட்ட நிச்சயம் உங்களுக்கு இருக்கவேண்டும்.
அடுத்து, உங்கள் கடனை இயேசுவால் முழுமையாக தீர்க்க முடியுமென்ற நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடுங்கள் (யோவா. 11:40, எபி. 11:6, மாற். 9:23, யாக். 1:6, மாற். 11:24). உங்கள் வருமானத்தில் ஒரு நல்ல தொகையை யாருடைய கட்டாயமும் இல்லாமல் முழுமனதோடு, புன்முறுவலோடு ஆண்டவருடைய ஊழியங்களுக்கு கொடுக்க முயலுங்கள் (நீதி. 11:25, லூக். 11:42). செல்வம் ஈட்ட ஆற்றல் தருபவர் தெய்வம் (இ.ச.8:18). அவர் உங்களுக்கு அருள் தருவார்.

எனக்கு பிள்ளைகள் இல்லை. இயேசுவை நம்பினால் குழந்தை கிடைக்குமா ?