089. எனக்கு பிள்ளைகள் இல்லை. இயேசுவை நம்பினால் குழந்தை கிடைக்குமா ?

எனக்கு பிள்ளைகள் இல்லை. இயேசுவை நம்பினால் குழந்தை கிடைக்குமா ?

சர்வ சக்தீஸ்வரனுக்கு இயலாத காரியம் ஒன்றுமேயில்லை. தனிமையில் இருந்த ஆதாமுக்கு ஏவாளை மனைவியாகக் கொடுத்து அவர்களிடம், “பலுகி பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்’ என்று சொன்ன பரமாத்மா நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பார். அவர் உங்களை ஒரு தந்தையாக, தாயாக மாற்றமுடியும்.
அவர் தன்னை நம்பும் மக்களுக்கு கொடுத்த உறுதிமொழிகள் பின்வருமாறு: “பேறுகாலத்தை ஏற்படுத்திய நான் மகப்பேற்றை தடைசெய்வேனா? மகப்பேற்றுக்குக் காரணமான நான் கருப்பையை அடைத்து விடுவேனா?” என்கிறார் கடவுள் (எசா. 66:9). “நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக” (தி.பா. 128:6). “குறைகாலப் பிள்ளைப்பேறும், மலடும் உன் நாட்டில் இரா, உன் வாழ்நாட்கள் எண்ணிக்கையை நான் நிறைவுசெய்வேன்” (வி.ப. 23:26) என்று கர்த்தர் கூறுகிறார். “பிள்ளைகள் ஆண்டவர் அருளும் செல்வம் மக்கட்பேறு அவர் அளிக்கும் பரிசு” (தி.பா. 127:3). “உங்களுக்குள்ளும், உங்கள் கால்நடைகளுக்குள்ளும் ஆணிலும் பெண்ணிலும் மலடு இரா (இ.ச. 7:14). மலடியை அவள் இல்லத்தில் வாழவைத்து தாய்மைப்பேறு பெற்று மகிழுமாறு அவளுக்கு அருள்கின்றார் (தி.பா. 113:9). ஆண்டவருடைய வல்லமையால் குழந்தைப் பேற்றைப் பெற்றுக் கொண்ட இறை நம்பிக்கையாளர்களில் ஒரு சிலருடைய பெயர்களை தருகிறேன். மலடியாயிருந்த சாராளுக்கு ஈசாக்கைக் கொடுத்தார் (தொ.நூ. 16:1, 18:10-15, 21:1-3). மலடியாயிருந்த ரெபேக்காள் கர்ப்பம் தரித்து யாக்கோபையும், ஏசாவையும் பெற்றாள் (தொ.நூ. 25:21-26). குழந்தை இல்லாதிருந்த ராகேல் கர்ப்பம் தரித்து யோசேப்பை பெற்றாள் (தொ.நூ. 30:2-24). குழந்தையில்லாமல் மன உளைச்சலடைந்த அன்னாள் கர்ப்பவதியாகி சாமுவேலை பெற்றெடுத்தாள் (1சாமு. 15:19-20). மலடியாயிருந்த எலிசபெத் யோவானை பெற்றாள் (லூக். 1:7-24). இவர்களெல்லாரும் அற்புதங்களை செய்யும் ஆண்டவர் மேல் வைத்திருந்த நம்பிக்கையால் குழந்தைப் பேற்றைப் பெற்றுக்கொண்டனர். பொறுமையோடு காத்திருந்தால் ஆசீர்வாதங்களை பெற்றெடுப்பீர்கள்.

எனக்கு அடிக்கடி கெட்ட கனவு வருகிறது. இயேசு என்னை விடுவிக்க முடியுமா ?